
தஞ்சாவூருக்குப் பக்கத்தில் அவளிவணல்லூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலத்தில்

அரக்கோணத்திற்கு அருகில் உள்ள திருவாலங்காட்டிலும் சொன்ன சொல்லைக் காக்க வேண்டித் தீப் பாய்ந்த வேளாளர்களுக்கு சுவாமி சாட்சியாக விளங்கி முக்தி தந்து சாக்ஷி பூதேச்வரனாகக் காட்சி அளிக்கிறான்.
தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ பாபங்களைத் தினமும் செய்கிறோம். வாக்காலும் மனத்தாலும் செய்யும் பாபங்களுக்கு அளவே இல்லை. தெய்வக் குற்றங்களே செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. தெய்வ சொத்தைத் தனது என்று கோர்ட்டிலும் பொய் சாட்சி செய்யத் துணிந்து விட்டார்கள். தெய்வமாவது தண்டிப்பதாவது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. சாட்சிகளின் அடிப்படையிலே நீதி மன்றங்களும் நடைபெறுவதால் தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவதிலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.நியாயமாகப் பார்த்தால் இவ்வளவு பாபங்கள் செய்யும் நமக்கு சாப்பாடு கிடைப்பதே சுவாமியின் பரம கருணையை காட்டுகிறது என்று காஞ்சிப் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அக்கிரமங்கள் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே என்று அலுத்துக்கொள்ளும் பலருக்கு இதுவே பதில். அடுத்தவன் அதிகமாக பாவம் செய்தால் நாம் ஒருக்கால் சற்றுக் குறைவாகப் பாவம் செய்கிறோமோ என்னவோ. குறைவே இல்லாத நிறைவாக ஈச்வரன் ஒருவனே விளங்குகின்றான் என்று திருவாசகம் சொல்கிறது.சுவாமி எல்லோரையும் உடனே தண்டிப்பது என்று ஆரம்பித்தால் எவ்வளவு பேர் மிஞ்சுவார்கள்? அதனால்தான் வேத மாதா நமக்காகப் பரம கருணையுடன் பரமேச்வரனை வேண்டிக்கொள்கிறாள். "ஹே சம்போ உன்னுடைய கோபத்துக்கு நமஸ்காரம்" என்று ஸ்ரீ ருத்ரம் ஆரம்பிக்கிறது
ம்ருடன் , சங்கரன் என்றெல்லாம் ஆராதிக்கப் படும் பகவானை வேதம் மேலும் கேட்கிறது: "எங்களிடம் நீ பரம கருணையோடு அருளவேண்டும். அதனால் பினாக பாணியான நீ வில்லையும் அம்புகளையும் இறக்கி வைத்துவிட்டு வர வேண்டும். பிரதம வைத்யனான நீ எல்லா நலன்களையும் அருள வேண்டும் " என்றெல்லாம் பிரார்த்திக்கிறது.